Thursday, June 19, 2008

அச்சு வெல்லமே...அச்சு வெல்லமே...




தமிழ்நாட்டில் பழனி, புளிக்கல் பாளையம், தர்மபுரி, தாராபுரம், நெய்க்காரன் பட்டி இங்கெல்லாம்
வெல்லமும் சர்க்கரையும் தயாராகிறது. இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிப்படுகை
யில் உள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி, உப்பளப்பாடி, நக்கம்
பாடி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தயாரிக்கப்படும் வெல்லமும் சர்க்கரையும்
சிறப்பாக பேசப்படுகிறது. காவிரிப்படுகையின் மண்வாகு சிறப்பாக இருப்பதால் தஞ்சை பகுதி
யில் உற்பத்தியாகும் வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும் தனியான மதிப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுத்தங்கம் என்றால் அச்சு வெல்லத்தையும், சர்க்கரையையும்
குறிக்கும். வெள்ளைத்தங்கம் என்றால் சீனியைக்குறிக்கும்.
காவிரிப்படுகையில் விளைவிக்கப்படும் கரும்பிலிருந்து எந்திரங்கள்மூலம் சாறுபிழியப்படுகிறது.
பெரிய கொப்பரையில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாறு நிரப்பப்பட்டு, கரும்புச்சக்கைகளால்
எரியும் அடுப்பில் கொதிக்கவைக்கப்படுகிறது.
கரும்புச்சாற்றில் உள்ள அழுக்குகளை எடுக்க சோடா உப்பு, குருணை ஹைட்ரஸ் போன்றவற்றை
சிறிதளவு சேர்க்கிறார்கள். சாறுகொதித்து பாகாய் மாறும் தருணத்தில் அச்சுக்களில் ஊற்றினால்
அருமையான வெல்லம் தயார்.
பாகை ஆறவைத்து துடுப்பால் கிளறினால் சர்க்கரை தயார். மிதமான பதத்தில் உருண்டை
அச்சுக்களில் ஊற்றினால் உருண்டை வெல்லம் தயார்.

No comments: