Monday, June 16, 2008

திருவையாற்றில் ஏழூர் பல்லக்கு-சப்தஸ்தானம் in THIRUVAIYARU












சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்கும். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்கும்.

1 comment:

cheena (சீனா) said...

அருமை நண்பர் குருமூர்த்தி

கொசுவத்தி சுத்த வைச்சிட்டிங்களே

தஞ்சையின் முத்துப் பல்லக்கு கண்ணாடிப் பல்லக்கு - திருவையாறின் காவிரி - தன்சியிலிருந்து திருவையாறு செல்லும் வழி எல்ல்லாம் ப்சுமையான வயல்கள் - நீரோடைகள் - சிற்றாறுகள் - சிறுவனாய் ஐம்பதாண்டு கால்ல்ம் முன்பு சுற்றிச் சுற்றி வந்தது மனதினில் நிழலாடுகிறது.

அருமையான படங்கள் - விளக்கங்கள் - கைலாயமே வந்தது - அருமை அருமை

நல்வாழ்த்துகள்