Thursday, June 19, 2008

தஞ்சாவூர் வீணை(THANJAVUR VEENA)

வீணை செய்யும் தொழில் தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெறுகிறது.
வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து
வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள்
செய்யலாமாம். வீணையின் அளவு நாலேகால் அடி. வெளிக்கூடு அகலம் பதினாலரை
அங்குலம்.சராசரியாக 7 கிலோவிலிருந்து 9 கிலோவரையில் எடை இருக்கும்.

சரஸ்வதி வீணை, ஏகதண்டி வீணை என்ற இரண்டு வகையான வீணைகள் தஞ்சாவூரில்
செய்யப்படுகின்றன.வீணையின் குடத்தின்மேல் சிற்பங்களும் செதுக்குகிறார்கள்.

வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம்.
நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது
குறையத்தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து
முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.

வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம்
உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.

தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய்
வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள்
8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது.

ஆதாரம்: தினமணி
cauverynagarwest@gmail.com

No comments: