Friday, June 20, 2008

ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் கோயிலின் எதிரே மிகப்பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது.
ஒரு உண்மையான குதிரை வானவெளியில் தாவிச்செல்ல முன்னிரு கால்களையும்
தூக்கினால், அதன் அங்க அமைப்பு, சதைமடிப்பு, நரம்புத்துடிப்பு எப்படியிருக்குமோ அதே
நிலையில் அழகான கலை நுட்பத்துடன் 33 அடி உயர குதிரை சிலை அய்யனார் சன்னதிக்கு எதிரில் நிற்கிறது.

ஆசியாக்கண்டத்திலேயே மிகப்பெரிய குதிரை சிலை இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள கோவிலில் உறையும் இறைவன் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் என்று அழைக்கப்படுகிறார்.

அறநிலையத்துறையைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு திருவிழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நெடும் தொலைவில் இருந்தெல்லாம் வந்து செல்லுகிறார்கள்.

குதிரை மற்றும் யானை இவையெல்லாம் அய்யனாரின் வாகனங்களாக போற்றி வணங்கப்படுவது தமிழர் மரபு.

தகவல்: ஆசிரியர் அ.சண்முகம்-சித்துக்காடு

2 comments:

Expatguru said...

மண் வாசனை வீசும் அருமையான பதிவு.

Sri Srinivasan V said...

Fantastic Blog.
I enjoyed all your posts.
Thank you sir and Good wishes,
God Bless you,
Anbudan,
Srinivasan,
Perth, Australia.