Tuesday, March 25, 2008

புகழ்பெற்ற மாணவர் விடுதிகள்-FAMOUS HOSTELS -ORATHANAD-RAJAMADAM

ஒரத்தநாடு, ராஜாமடம், நீடாமங்கலம், திருவையாறு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களுடன் மாணவர் விடுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளுக்கு வயது 238 ஆண்டுகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! இவையனைத்தும் தஞ்சாவூரை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களின் மனைவிமார்களால் நிர்வாகம் செய்யப்பட்டதாக 1801ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அப்போதைய தஞ்சாவூர் அரசர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் இருந்து தெரியவருகிறது.
இதைப்போன்றதொரு மாணவர் விடுதி 'சிரேஸ் மாணவர் இல்லம்' என்ற பெயரில் தஞ்சாவூர் அரசர் பள்ளியுடன் இணைக்கப்பட்டு இப்போதும் செயல் பட்டு வருகிறது.
இங்கு ஏழைமாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு கல்வியுடன், உறைவிடம், உணவு, மற்றும் இதர வசதிகள் அளிக்கப்படுவது சிறப்பு.
சத்திரம் இலாகாவின் நிர்வாகத்தில் செயல்பட்டுவருகின்ற இந்த விடுதிகளின் நிர்வாகத்தை செம்மைப்படுத்திய பெருமை நீதிக்கட்சியைச்சேர்ந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைச் சேரும். ராஜாமடம் மற்றும் ஒரத்தநாடு சத்திரம் விடுதியில் தங்கிப்பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தனியார் துறையிலும் இன்று உலகமெங்கும் விரவி இருக்கிறார்கள்.இந்த விடுதிகளின் காப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள், மற்றும்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் நேரடி அனுபவங்கள் வருங்காலத்தில் இந்த வலைப்பூவில சேர்க்கப்படும்.உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர் எவராவது இந்த விடுதிகளுடன் தங்களுடைய நினைவை அல்லது தொடர்பை பகிர்ந்து கொள்ளக்கூடும்.
1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அப்போதைய தஞ்சாவூர் மகாராஜா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் இந்த சத்திரங்களைப்பற்றிய சுவையான தகவல்களைத்தருகிறது.
இராமேஸ்வரம் செல்லும் பாதையில் இந்த சத்திரங்கள் அமைந்திருந்தன.
இராமேஸ்வரத்திற்கு யாத்திரை செய்வோருக்கு உதவிசெய்வதற்காகவென்றே இந்த சத்திரங்கள் செயல்பட்டன.
ஒவ்வொரு சத்திரத்திற்கும் இணைப்பாக பகோடாக்கள், அன்னதானக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
சத்திரங்களை நிர்வகிக்கும் செலவிற்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நிலங்கள் யாவும் மன்னரின் மனைவியர் பேரில் வழங்கப்பட்டிருந்தன.
மன்னரின் மனைவியர்களில் மிகவும் மூத்தவர் சத்திரநிர்வாகத்தின் பொறுபில் இருப்பார். அவர் இறக்கும்போது வரிசையில் உள்ள அடுத்த மூத்தவர் பொறுப்பிற்கு வருவார்.
சத்திரங்கள் யாவும் மன்னரின் வீட்டின் ஒருபகுதியாக கருதப்பட்டது.
சத்திரங்களில் அளிக்கும் தருமகாரியங்கள் யாவும் மன்னர் குடும்பத்தில் நடப்பவையாகவும், குடும்பகவுரமாகவும் கருதப்பட்டது.
தர்மகாரியங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலங்களில் அமைச்சர்களோ, அவர்களின் மகன்களோ, அவர்களின் வாரிசுகளோ தலையிட உரிமையில்லை.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் நாற்பதாயிரம் யாத்ரீகர்கள் இந்த பாதையில் இருவழிகளிலும் பயணம் செய்தனர்.
காசி, டெல்லி, ஒளரங்காபாத், பூனா இங்கிருந்தெல்லாம் யாத்ரீகர்கள் இந்த வழியே இராமேஸ்வரத்திற்கு சென்றுவந்தனர்.
பிராமணர்களில் இருந்து பறையர்கள்வரை ஜோகு, ஜங்கம், அதிதி, பைராகி ஆகிய எல்லோருக்கும் சமைத்தசோறு இங்கு வழங்கப்பட்டது.
சொந்தமாக சமைத்து சாப்பிட விரும்புவோருக்கு அரிசியும், மற்ற உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.
நள்ளிரவில் ஒரு மணி அடிக்கப்படும். அதுவரை இந்த உணவு வழங்கப்படும். அதுவரை உணவு வாங்கிக்கொள்ளாதவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக இந்த மணியோசையாம்.
யாத்திரையை தொடரமுடியாதவர்கள் சத்திரத்திலேயே விரும்பும்வரை தங்கிக்கொள்ளலாம்.
ஒவ்வோர் சத்திரத்திலும் நான்கு வேதங்களையும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் நியமிக்கப்பட்டார்.
வீக்கம், விஷக்கடி, மற்றும் நோய்கள் இவற்றை குணப்படுத்துவற்காக ஒரு வைத்தியரும் நியமிக்கப்பட்டார்.
சத்திரத்தில் தங்குவோர் தலைமை ஆசிரியரின் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டார்கள்.
சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பத்திய சாப்பாட்டுடன், கனிவான உபசரிப்பும், மருந்துகளும் வழங்கப்பட்டன. இறந்துபோனவர்களின் உடல்கள் அவர்களுடைய சாதி வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டன.
பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.
இதுதவிர நான்கு நாட்களுக்கு ஒருமுறை தேய்த்துக்குளிக்க எண்ணெயும்,
தேவைப்படும்போது மருத்துவ வசதியும், துணிமணிகளும் வழங்கப்பட்டன.
மேலும் படிக்கவிரும்பும் ஆசிரியர்களுக்கு தேவையான நூல்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் கற்றுத்தேர்ந்தபிறகு அவர்களுடைய திருமண செலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த சத்திரங்களில் கைக்குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது.
கர்ப்பிணிப்பெண்கள் கனிவுடன் பரிபாலிக்கப்பட்டனர்.
சத்திரத்தில் இருக்குபோது பிரசவம் நடந்தால் செலவுமுழுவதும் சத்திரநிர்வாகத்தினுடையது
அவர்களுக்குத்தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு மூன்றுமாதங்கள்வரை சத்திரத்தில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். தந்தையை இழந்த பிராமணச்சிறுவர்கள் வறுமையின்காரணமாக பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தப்படாமல் இருந்தால் நிதிஉதவி அளிக்கப்பட்டது.
சத்திரத்திற்கென வழங்கப்பட்ட நிலங்கள் வளம் குன்றியவையாக இருந்தன.
இந்த நிலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் எந்தக்காலத்திலும் அரசாங்க வருமானமாக கருதப்படவில்லை என்பது மராட்டிய அரசர்களின் கொடைத்தன்மைக்கு சான்று.
மேலும் இந்த சத்திரங்களில் அளிக்கப்பட்ட தரும காரியங்களுக்கு எந்த விதமான பங்கமும் ஏற்படக்கூடாது என்பதில் மராட்டிய அரசர்கள் வெகு கவனமாக இருந்திருக்கின்றனர்.
பஞ்சம் ஏற்பட்டு சத்திரத்திற்கு வருவாய் அளித்துவந்த நிலங்கள் சரியாக விளையாமற்போகும் காலங்களில் வேறு அரச வருமானங்களில் இருந்து சத்திரங்களின் பரிபாலன நிதி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் வெள்ளையர் ஆட்சிக்கு வந்தபிறகு, பஞ்சம் காரணமாக இந்த சத்திரங்களுக்கு வெள்ளை அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அதிகாரம் இழந்த தஞ்சை மராட்டிய அரசர் எழுதிய கடிதத்தை கண்ணீருடன் தான் நாம் படிக்கவேண்டும்.
"As the lands annexed to the chetrums is in general very poor, it happens frequently
from a deficiency of rain, that they do not produce sufficient for the expences.
When this is the case my anxiety to prevent any diminution of these excellent charities, which I consider
as the most honourable appendage of my dignity, has always induced me to send to them
from the circuar both grain and money sufficient to make up the deficiency. After Mr.
Harris was appointed to the management of that soubah, he must remember that I applied to
him for a considerable quantity of paddy at different times for the use of the chetrums.
The chetrums are not of recent foundation. The chetrum of Munmaligoody and
some others were founded by my ancestor Pretaupsing above forty years ago, and have
continued to distribute their charities ever since. My father the late Tulsagee Rajah, twenty five
or thirty years ago founded the chetrums of Minmushale, Salutehnahoapoor, and Rajyamul.
None of these chetrams were founded in the reign of Amersing or by me since my accession.
Although these charitable institutions did not originate with me, I consider them as attached to
my house, and essential to my reputation and happiness. The Tanjore country is celebrated
over all world for its charities, it is called Dhermraje, and I consider the reputation which
reverts upon me through all countries from this appellation, as the most honorable
distinction of my rank. The revenues appropriated to the support of the charities of my
ancestors, and my Tulsajee Rajah, have never been included in the public revenue of the
country. They invariably cherished and supported the charities. It is my earnest wish to
do the same. The superintendence of them has always descended from the older to the
younger queen. It has remained in the hands of the senior until her death and then
descended to the wife of the reigning Rajah. I have a perfect confidence that this custom of
my ancestors will not be deviated from , and that I shall not suffer the disgrace of seeing it
abolished in my reign.
The perwangys issued by Pretaupsing and Tulsajee previous to the capture of the fort
cannot be found. After the capture of the fort the Nabob plundered the place, and carried off all
the records, in the the dufter. From this circumstance no records prior to that date remain.
After the restoration of the fort, the late Tulsajee Rajah issued new perwangee for all the ancient
charitable institutions as well those established by himself. These are in my possession.
There is a regular grant also for Chetoobaba chetrum.
What can I write more.
20th January 1801

எண்ணமும் எழுத்தும்: மு.குருமூர்த்தி,
cauverynagarwest@gmail.com

No comments: